#கடவுளுக்கும்_முன்பிருந்தே_உலகம் _இருக்கிறது .
🌷🌷🌷🌷⚘⚘⚘⚘🌷
17
📚📚📚📚📚📚📚👮♂️
புத்தகம் . கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது.
ஆசிரியர்.ஆதவன் தீட்சண்யா
பக்கங்கள். 112
வகை. கட்டுரைகள்
பதிப்பகம்..நூல் வனம்
இராமாபுரம்
சென்னை 89.
சென்னை புத்தகக் கண்காட்சியில்2020 வாங்கியது. ஆசிரியரின் கவிதைகள் ஒன்றிரண்டு படித்த நினைவினாலும் ,இந்த நூலின் தலைப்பிற்காகவும் தேர்ந்தெடுத்தேன்.இந்த தலைப்பை இரண்டாம் முறையாக படித்த போது தான் "எவ்வளவு #செறிவான வாக்கியம்" என்று ஆச்சரியமாக இருந்தது. திரும்பத் திரும்ப வாசிக்க, சிந்திக்க வைத்து விட்டது.அட! ஆமால்ல!😍என்று!
📗இப்புத்தகத்தில் 18 கட்டுரைகள்.ஆசிரியர் சில இடங்களில் பேசிய பேச்சுகளும் கட்டுரை வடிவில்...
கட்டுரை தலைப்புகளைப் படித்தாலே அவற்றில் சொல்ல வந்த கருத்துகளை ஓரளவு யூகிக்க முடியும் என்பதால் அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்
1.கொலையில் பிழைக்கிறதாம் கலவரம்.
2.காமன்வெல்த் மாநாடு:பொருத்தமான இடத்தில், மிகப் பொருத்தமான நபரால்.
3.#கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது.
4.இறைவனது படைப்பிலேயே மனிதனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு இருக்கிறது...
5.#அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப் போகிறோம்?
6.கண்டேன் களைப்படைந்த என் தோழனை...
7.என்னதான் செய்யப் போகிறோம் அம்பேத்கரை?
8.மறுபடியும் கொளுத்துவோம் மநுஸ்மிருதியை
9.தோலிருக்க சுளை முழுங்கிகள்.
10. தலித்துகளும் முஸ்லிம்களும்
11.மே1 :உழைப்பாளர் தினமும் ஐசிஐசிஐ மோசடியும்
12. நரி யூரிலிருந்து புலியூருக்கு..ஸ்ரீமாவோ_ சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50ஆவது ஆண்டு.
13. போதி மரத்தின் வேரில் பூணூல்
14. அதிர வருவதோர் நோய்.
15. புதிய பாதைகளில் சென்றால்தான் இடிந்த கரையை அடைய முடியும்
16. சாதிமறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள்
17. நீச காரியமும் நீச காரியனும்...
18. கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன .கடுகளவேனும் செய்துகொண்டிருக்கிறோமா?
Comments
Post a Comment