Posts

Showing posts from February, 2024

15.உடலாளுமன்றம்..முனைவர்.என்.மாதவன்

Image
21/08/22 15/50 #ஆண்டுவிழா_அறிவியல் புத்தகம்... #உடலாளுமன்றம்.  ஆசிரியர்..  முனைவர். என். மாதவன் பக்கங்கள்.. 104  பதிப்பகம்.. புக்ஸ் ஃபார் சில்ட்ரன்_ பாரதி புத்தகாலயம். வகை.. கட்டுரை. தினமலர் 'பட்டம்' இதழில் வெளிவந்த கட்டுரைகள். வளரிளம் பருவத்தினர் தானே படித்து ,அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல் . பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்கள் கூடி பேசுவது போல, உடலின் உறுப்புகள் அனைத்தும் தங்கள் குறைகளையும், பாதுகாக்க வேண்டிய முறைகள் குறித்தும் அவர்களது மன்றத்தில் வெளிப்படுத்துகின்றன. அறிமுகத்திலிருந்து உடல் எடை உறுதி செய்வதன் அவசியம் வரை 30 கட்டுரைகளாக உடற்கூறு இயல் பற்றி பல அறிவியல் செய்திகளை அளித்துள்ளார் ஆசிரியர். வளரிளம் பருவத்தினர் மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற பெரியவர்களுக்கும் பல செய்திகள் கட்டுரைகளில் உள்ளன. பார்வை அமைச்சகத்தின் பார்வையில் இருந்து.. கேட்பு அமைச்சகத்தின் கேள்விக்கணைகள், மூக்கின் முனகல்கள்,  செய்திகள் வாசிப்பது செய்தி ஒலிபரப்புத் துறை, 'தொண்டை' மண்டல சகாக்கள்,  சத்தை பிரிப்போர் சங்கம், கணையத்தின் கணைகள், லப்டப் ரகசியம் ,  சிறு

14.புத்து மண்.. சுப்ரபாரதிமணியன்

Image
20.08.22 14/50 #ஆண்டுவிழா_இயற்கை. புத்தகம்... புத்து மண் (சுற்றுச்சூழல் நாவல்) ஆசிரியர்.. சுப்ரபாரதி மணியன். பதிப்பகம்..நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.. பக்கங்கள்..133 வகை..நாவல். நூலைப் பற்றி..    சமூகத்தின் பால் அக்கறை கொண்ட, ஏதேனும் சிறு மாற்றமாவது நிகழாதா எனத் தன் முதுமையிலும்  போராடும் மணியன் என்ற போராளியைச் சுற்றி நிகழும் கதை. திருப்பூர் தான் கதைக்களம் என்றவுடன் சாயக்கழிவுகளினால் ஏற்படும் மோசமான நிலைகள் நம் கண் முன்னே வந்துவிடும். எத்தனையோ திரைப்படங்கள் கூட இதைப் பற்றி பேசிஇருந்தாலும் தீர்வு ஒரு கேள்விக்குறியே. வளர்ச்சி என்ற பெயரில் அடித்தளத்தை இழந்து நம் உலகம்  ஆட்டம் கண்டுள்ளது.   மணியன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி,மகள் தேனம்மை, ஆய்வு மாணவி ஜூலியா என்பவர்களின் பார்வையில் மணியனைப் பற்றியும், அவரின் போராட்டங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.  ஸ்பின்னிங் மில்களில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தருகிறது.ஆனால் இந்தத் திட்டத்தில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, பயிற்சி என்ற பெயரில் மூன்று மாதங்கள் சம்பளமில்லாமல் வேலை பார்ப்பது,இயந்திரத்த

13.ராசாத்தி ... சிந்து சீனு

Image
12/07/22 13/50 புத்தகம்... #ராசாத்தி  ஆசிரியர்... சிந்து சீனு. வகை ...நாவல் . பதிப்பகம்.. லாவண்யா புத்தகாலயம், வேலூர். 97905 66619. பக்கங்கள்..104  ஆசிரியரைப்பற்றி...  கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல்வேறு தளங்களிலும் பயணிப்பவர். இவருடைய யார் அவன் ?சாத்கர் அரிசிக்கா போன்ற நாவல்கள் எளிய மனிதனின் வாழ்வியலையும், சுற்றுச்சூழலைப் பற்றியும் பேசுவன. நூலைப் பற்றி... தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பினை சுரண்டி முதலாளி வர்க்கம் வாழ்வதைப் போல குடும்பத்திலும் சிலர் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்கிறவர்கள் உண்டு என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது இந்தப் புதினம்.  மூன்று தலைமுறை வாழ்க்கையை ராசாத்தியை மையமாக வைத்து, எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரித்துக் காட்டுகின்றது.  பஞ்சமி நிலத்தைப் போராடிப்பெற்ற முருகேசன்- சாந்தா தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் சிவனாண்டி .சிறிய வயதிலேயே பொறுப்புணர்ந்து நடந்து கொள்பவன். ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும்  தான் தோன்றித்தனமாக இருக்கும் தம்பிகள் சுதர்சனம் மற்றும் பிரகாசம். வயல்வெளிகளில் கூலி வேலை செய்தும் ஆடு மாடுகளை மேய்த்தும் பிழைக்கும் எளிய மனிதர