49.தாயுமானவள்
👰👰👰🌍🌎🌏👰👰👰
புத்தகம். .#தாயுமானவள்
ஆசிரியர் .#நாகூர்ரூமி
வகை ...நாவல்
பக்கங்கள் ..112
பதிப்பகம் .LKM பப்ளிகேஷன், தி.நகர்.
வேலூர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வாங்கியது.
💖கதையைப் பற்றி..
தாயை இழந்து பாட்டியால் வளர்க்கப்பட்ட மகனின் கதை..
இல்லை அந்த மகனை சிரமங்களுக்கு இடையில் வளர்த்த பாட்டியின் கதை என்பதே சரி❤
நாவலாசிரியர் தன் பாட்டியோடு பெற்றுக்கொண்ட மறக்கமுடியாத அனுபவங்களையே கதையாக எழுதியுள்ளார்.
இஸ்லாமிய குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்துகிறார்.
🏃♂️🤺🕺🧘♂️
திண்ணை தாண்டுதல், பொன்வண்டு,கோலி விளையாடுதல்,நெல் பத்தாயம், பேருந்தில் அரை டிக்கெட் எடுக்க... என்பது போன்ற பழைய கால நினைவுகளை மீட்டு எடுக்கிறது.
❤
தாய் இறந்தது புரியாத வயதில் //ம்மி தூங்குது// என்று கூறுவது ,வவ்வா மீன் விலை பேசுவது, மௌலது ஓதும் நிகழ்ச்சி, நில வழக்கு என சோகம் ,நகைச்சுவை, வலி என அனைத்து உணர்ச்சிக் குவியல்களோடு கதை நகர்கிறது.
❤
பாட்டியின் நிர்வாகத்தை Repaying capacity, resources என ஒப்பிட்டு எழுதி இருப்பது சிறப்பு.
பால்ய காலத்தை மீண்டுமொருமுறை அனுபவிக்கவும் ,எள்ளல் நடையில் மனம் விட்டு சிரிக்கவும் நாவலை படிக்கலாம்❤👍🏻
Comments
Post a Comment