4.ஹோமர்(பாலகுமார் விஜயராமன்)
📚📚📚📚📚📚📚📚📚📚
4/50
புத்தகம் ..#ஹோமர்
ஆசிரியர் -பாலகுமார் விஜயராமன்.
பக்கங்கள்.. 162
வகை.. நாவல்
அமேசான் கிண்டிலில் படித்தது.
ஓர் அரசியல்வாதியின் கொலையோடு ஆரம்பிக்கும் கதைக்களம் ,புறா பந்தயக் களத்தில் பயணித்து ,நாய் வளர்ப்பு களத்திற்காக கொடைக்கானலுக்கு செல்லும் போது, காதல் களத்தையும் சற்று எட்டி பார்த்து, மீண்டும் நம்மை அரசியல் களத்திற்கு கொண்டு வந்து முடிக்கிறது.
🪶🪶
புறா வளர்ப்பு பற்றி நிறைய தகவல்கள் ஹோமர் புறா இனத்தின் தன்மை வியக்கவைக்கிறது. குறைந்த வருமானத்தை உடைய குருபால் படும் சிரமங்கள் ,இறுதியில் அவர் எடுக்கும் முடிவு என பரபர திருப்பங்கள்.
புறா ,நாய் என ஒவ்வொரு விலங்கினமாக யோசித்துப் பார்த்தால் கடைசியில் மனித இனம் ஒன்றுதான் அதிகமாக நன்றி மறக்கும் போல.. பந்தய வெறிபிடித்த இன்னாசி செய்யும் செயல்களை கதை என்பதை மறந்து மனதைப் பதற வைக்கிறது.
புறாக்கள் வளர்க்கப்பட்ட கூடுகளைத் தேடி ,பல இடையூறுகளை தாண்டி, வருவது பெண்களின் மன நிலையையும் அகதிகளின் மனநிலையையும் நினைவூட்டுகிறது.
என்னதான் வலுவான காரணம் இருந்தாலும் சட்டப்படி தவறான காரியம் செய்தால் நம் தமிழ் சினிமாவில் கூட சில வருடங்கள் சிறை தண்டனை என்று காட்டுவார்கள் .ஆனால் இந்த கதையில் மனித தர்மம் வெல்வதாகக் காட்டியிருக்கிறார்.
புதிய கதைக்களம்.. வாசிக்க எளிமை.. வாசிக்கலாம்.😍
நல்ல விமர்சனம் !
ReplyDeleteThank you Mam
Delete