15.கிடை
#கிராவைக்_கொண்டாடுவோம்
புத்தகம் ..கிடை
வகை ..குறுநாவல்
பக்கங்கள்.. 60
பதிப்பகம் ..காலச்சுவடு
கி.ராவின் எழுத்துக்களை சிறுவயதிலிருந்தே வாசித்த அனுபவம் இருந்தாலும் அவருடைய எந்த புத்தகமும் அலமாரியில் இல்லை. அதற்காகவே CBF2021ல் இந்த நாவலை வாங்கினேன்.
குறுநாவல் அளவில் சிறியதாக இருந்தாலும் பேசப்படும் விஷயங்கள் அதிகம்.
#செம்மறி ஆடு, வெள்ளாடு களின் வகைகளைப் பற்றி...
#கிடையில் பாங்கு பிரிப்பதைப் பற்றி...
#கீதாரியின் வேலையைப்பற்றி..
#வயதான கீதாரிகளின் கைத்திறமைகள் பற்றி...
#கிடையை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்பவர்கள் பாடு பற்றி..
#இடைக்காடர் என்னும் சித்தர் பஞ்ச காலத்தில் தன் ஆடுகளை எப்படி வளர்த்தார் என்பது பற்றி...
#மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன் படுத்திக் குளிர்காயும் பொன்னுசாமி நாயக்கர் போன்ற மனிதர்களைப் பற்றி (பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொள்கிறான்) ...
#ராமக்கோனார் முதன் முதலாக திருச்செந்தூருக்கு ரயிலில் சென்று, முதன்முதலில் கடலைப்பார்த்த கதை மூலம் அவர்களின் நகைச்சுவை உணர்வு பற்றி ...
#அந்தக்கால டிடெக்டிவ், துப்பறிவாளர் திம்மநாயக்கரின் நுட்பமான திறமையைப் பற்றி ...
#பள்ளக்குடி செவனியோட துண்டங்களைப் பத்திக் கொண்டு போகும் பணக்கார எல்லப்பனைப் பற்றி....
#ஊருக்கே தெரியாமல் எல்லப்பனுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்யும் பெரிசுகளின் சாமர்த்தியத்தைப் பற்றி...
#50 ஏக்கர் கரிசல் காடோடு, இரண்டு பக்கமும் மனைவிகள் வரும் போது செவனியின் ஞாபகமே இல்லாம மூன்று நாள் கல்யாண ஊர்வலம் வரும் ஆண்மகனின் குணாதிசயம் பற்றி...
. #சிரித்துக்கொண்டே கேட்டாலும் நீ ______(சாதிப் பெயர்) என்னை தொடலாமா? என்று கேட்ட பிறகும் எல்லப்பனை நம்பிய பாவத்திற்கு எருக்கம் விளாரில் அடிதான் கிடைக்கும் இல்லையா???
#கானல் நீரைத் தேடிச் சென்ற ஒற்றைப் புள்ளி மானாய் செவனி...🖤
சில சந்தேகங்கள்...
1._____தேனீக்கள் அமர்ந்திருப்பதை திம்மய நாயக்கர் கவனிப்பது..
2.உங்க எல்லாருடைய கால்கள்; முழங்காலுக்கு கீழே அது எங்களுக்குத் தான் சொந்தம் தெரியுமா? என்று செவனி கேட்பது...
3.//ஆச்சிக்குட்டி வாங்க வந்த கிடை பிச்சைக்காரர்கள்// பற்றி...
அலாதியான வாசிப்பனுபவம் பெற வாசியுங்கள் ❤️
Comments
Post a Comment