Posts

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு

Image
#Reading marathon_2021 Book 12 புத்தகம்📙📘📗📓 ..#வானிலிருந்து_வந்தவர்கள் . ஆசிரியர்.. சிந்து சீனு வகை ..சிறுகதை தொகுப்பு  பதிப்பகம் ..அன்பு நிலையம், வேலூர். அலைபேசி 98 65 22 42 92. ஆசிரியரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு ஒன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அத்தனை சிறுகதைகளும் நம்முடைய சூழலில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதோடு ஒரு படிப்பினையைத் தருவதாகவும் 👍 #நாடி_ஜோதிடம் நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வு எப்படியாவது மேன்மை அடைந்து விடாதா என்று விழும் இடங்களில் ஒன்று ஜோதிடம். ஓலைச்சுவடிகளில் தங்கள் எதிர்காலத்தைத் தேடுபவர்களில் அநேகர் பட்டம் வாங்கியோர். ஒரு பவுன் தங்கத்தகட்டிற்காக ஒரு பெண்மணி படும் துயரத்தைக் கூறி நாம் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகின்றோம் என்று காட்டி இருக்கிறார். #விவசாயி பருவகாலங்கள் பொய்த்துப்போன இந்த காலத்தில் சிறு விவசாயிகளின் வேதனை சொல்லி மாளாது தான் .இரண்டு தங்கைகளையும் 5 மகள்களையும் பெற்ற விவசாயி ,அவரின்நிலை இறுதியாக வெள்ள நிவாரண நிதிக்கு காத்திருப்பதை வலியுடன் விவரித்திருக்கிறார். வேளாண் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப்...

10. குழந்தைகளின் நூறு மொழிகள்-ச.மாடசாமி ஐயா

Image
📚📚📚📚📚📚📚2021 புத்தகம் ..#குழந்தைகளின்_நூறு_மொழிகள். ஆசிரியர் ..ச. மாடசாமி        பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம் வகை.. கட்டுரைத் தொகுப்பு. பக்கங்கள் 96 நான் வாசிக்கும் ஆசிரியரின் மூன்றாவது நூல் .பூங்கொடி பாலமுருகன் அறிமுகப்படுத்திய உடன் வாங்கிவிட்டேன். அய்யாவின் ஒவ்வொரு நூலை வாசித்து முடித்ததும் ஒத்த அலைவரிசை உடைய நண்பர்களுடன் உரையாடிய நிறைவு மனதில்❤️ 14 கட்டுரைகள் நிரம்பிய அனுபவத் தொகுப்பு. இத்தாலியின் ரெகியோ அணுகுமுறை பற்றிய புதிய தகவல் முதல் கட்டுரையில்..  #குழந்தைகள் பேச நூறு மொழிகள்!  நூறு சிந்தனைகள்! - -  கண்டுபிடிக்க,  கனவு காண,  அவர்களுக்கு நூறு உலகங்கள்!  இது ரெக்கியோ பள்ளியின் முதல் ஆசிரியர் லோரிஸ் மாலகுஸ்ஸி அவர்களின் கவிதை. குழந்தையின் 99 உலகங்களை மறைத்துவிட்டு ஒரே ஒரு உலகை மட்டும் காட்ட விரும்புகின்றன பள்ளிகள் என்று வருத்தப்பட்டவர். பாடத்திட்டத்தையும்,35 மதிப்பெண்களையும் தாண்டி இந்த வரிகள் வகுப்பறையில் நமக்கு நினைவுக்கு வருமா? #கண்கள்_உங்களைத்தான்_கவனிக்கின்றன  என்ற இரண்டாவது கட்டுரையில்....  நம்பிக்...

9.காலம் தோறும் பெண்_இராஜம் கிருஷ்ணன்.

Image
2021📚📚📚📚📚 புத்தகம்.. காலம்தோறும் பெண் (சமூகவியல் ஆய்வு)  ஆசிரியர் .. ராஜம் கிருஷ்ணன். பதிப்பகம்.. சிந்தன் புக்ஸ்                              சென்னை.            Mobile  9445123164 வகை...கட்டுரை பக்கங்கள்..143 பெண் ஏன் அடிமையானாள்? எப்படி ஆனாள்? என ஆராய்கிறார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன் 25 கட்டுரைகளில்.. ஆதி நாட்களில் மனித இனக் குழந்தைகளின் தலைவியாக, தாயாக இருந்த பெண்கள் எப்போது ஒடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு, அடிமையாக்கப்பட்டாள்?  'தெய்வந் தொழாள் கொழுநற்றொழுதெழுவாள்  ' என்று வள்ளுவர் கூறியுள்ளார் எனில் எந்த நூற்றாண்டில் இப்படி மாறியது? வேத காலத்தில் பெண்களுக்கு மரியாதை இருந்ததா? வேதங்களையே படிக்கக் கூடாது என்ற நிலை தானே இருந்தது? கல்வி அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கிறதா? கிடைத்த வேலையை செய்ய முடிகிறதா? இவை போன்ற‌ வினாக்களை எழுப்பி ஆசிரியர் தான் பார்த்து பாதிப்படைந்த சம்பவங்களைப் பகிர்ந்து விடை காணவும்,படிப்பவர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறார்...

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா? _சுப.வீ

Image
2021_8📚📚📚📚📚 புத்தகம்.. ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா?  ஆசிரியர் .. சுப. வீரபாண்டியன் பதிப்பகம் கருஞ்சட்டை பதிப்பகம் பக்கங்கள்..40 வகை..கட்டுரை  #அறிவுத்தேடல் என்ற நிகழ்வில் இடம்பெற்றஆசிரியரின் உரையை சிறு நூலாக மாற்றியிருக்கிறார்கள்.   இயற்பியலை எளிமையாக எழுதுவதும், அறிவியல் துறை சாராதவர்களுக்கும்  புரியும் வகையில் இருப்பதும் ஹாக்கிங் எழுத்துக்களின் சிறப்பு. #Brief answers to the big question என்ற  புத்தகத்தில் இடம்பெற்ற முதல் கேள்வி தான் கடவுள் இருக்கிறாரா? என்பது. ஸ்டீபன் ஹாக்கிங்  வாழ்க்கை பற்றிய சுருக்கமான  குறிப்பும் உண்டு. கடவுள் நம்பிக்கை நிறைந்த நியூட்டன் ,அதைப்பற்றி கவலை இல்லாமல் இருந்த  ஐன்ஸ்டீன் அவர்களது கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இயேசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிரேக்க அறிவியல் அறிஞர் அரிஸ்டார்கஸ்( ‌ Aristarchus) சூரியன் தான் மையமாக இருக்கிறது., சூரியன் பூமி நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல்களால்  தான் கிரகணங்கள் உருவாகிறது, சூரியனும் ஒரு நட்சத்...

6.கல்விச்சிக்கல்கள்..(தீர்வை நோக்கி...). *உமா‌ மகேஸ்வரி*

Image
📚📚📚📚 புத்தகம்.. கல்விச் சிக்கல்கள்.. தீர்வை நோக்கி.. ஆசிரியர்  .. சு.உமா மகேஸ்வரி. பதிப்பகம்..#பன்மை_வெளி ,சென்னை.  944 391 8095 பக்கங்கள்.. 208 வகை.. கட்டுரை தொகுப்பு. ஆசிரியரைப் பற்றி... முகநூலில் அறிமுகம் ஆனவர். சென்னையில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர் .பன்முகத் திறமை கொண்டவர் . மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பவர்  என்பது சிறப்புத் தகுதி. புத்தகத்தைப் பற்றி.. இந்து காமதேனு இதழில் கட்டுரைகளாக வெளிவந்தவை. சமகாலத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறது. சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசாமல் தீர்வை நோக்கி நம்மை நகர வைப்பதே இந்த நூலின் வெற்றி. 31 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.  இணையவழிக் கல்வி பற்றிய முதல் கட்டுரையில் ஆன்லைன் கல்வியினால் ஏற்பட்ட விபரீதங்களைச் சுட்டிக் காட்டி,ஒக்லஹாமா பல்கலைக்கழக உளவியல் வல்லுனர் டக்வாலன்டினா அவர்களின் மூன்று முடிவுகளையும் குறிப்பிட்டுள்ளார் . அதில் முக்கியமானது  தற்போதைய கற்கும் சூழலில்.. கற்றல் எதிர்ப்பு மனநிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவது (Anti Education).. கொரானா காலம் தொடர்ந்தால் ஏற்படும் இடைநிற்ற...

5. வற்றிய மார்புகள்_தமிழ்க்காதலி தாரணி.

Image
5. புத்தகம் .. வற்றிய_மார்புகள் ஆசிரியர் - தமிழ்க் காதலி தாரணி பக்கங்கள்.. 96 அமேசான் கிண்டிலில் படித்தது. முக நூலில் அறிமுகம். தொழிற்சாலைகளால் வறண்டு போன நம் பூமித்தாயினைக் குறிப்பிடுகிறது தலைப்பு. இயற்கையை பாதுகாக்க இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. இடையில் பெண்களின் அக உணர்வுகளையும் எதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார். நேசிக்கும் மனிதரை மாற்றுவதோ,மதம் மாறுவதோ தூய அன்பிற்கான தேடல் தான். சரி தவறு என்று சொல்ல படைத்த வராலேயே முடியுமோ? சாந்தி மீது வைத்த பானுவின் அன்பு பிரமிக்க வைக்கிறது. காப்பர் தொழிற்சாலையினால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் தொடங்கும் கதை. அஞ்சலை என்ற ஜெசியைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. அஞ்சலையின் இரு மகள்கள் பானு மற்றும் மைதிலி, மகன் உத்ரா. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர் மூர்த்தி.. எல்லா மதத்திலும் ரிச்சர்டு போன்றோர் இருப்பார்கள் தங்கள் வசதிக்காக ஏமாற்றுவார்கள் என்பதை புரிந்து கொள்ளும் தெளிவு இருந்தால் அஞ்சலை ஏன் ஜெஸ்ஸியாக மாறப் போகிறாள்? விதிவிலக்கான வாழ்க்கை அவளுடையது...

4.ஹோமர்(பாலகுமார் விஜயராமன்)

Image
📚📚📚📚📚📚📚📚📚📚 4/50 புத்தகம் ..#ஹோமர்  ஆசிரியர் -பாலகுமார் விஜயராமன். பக்கங்கள்.. 162 வகை.. நாவல் அமேசான் கிண்டிலில் படித்தது. ஓர் அரசியல்வாதியின் கொலையோடு ஆரம்பிக்கும் கதைக்களம் ,புறா பந்தயக் களத்தில் பயணித்து ,நாய் வளர்ப்பு களத்திற்காக கொடைக்கானலுக்கு செல்லும் போது, காதல் களத்தையும் சற்று எட்டி பார்த்து, மீண்டும் நம்மை அரசியல் களத்திற்கு கொண்டு வந்து முடிக்கிறது.  🪶🪶 புறா வளர்ப்பு பற்றி நிறைய தகவல்கள் ஹோமர் புறா இனத்தின் தன்மை வியக்கவைக்கிறது. குறைந்த வருமானத்தை உடைய குருபால் படும் சிரமங்கள் ,இறுதியில் அவர் எடுக்கும் முடிவு என பரபர திருப்பங்கள். புறா ,நாய் என ஒவ்வொரு விலங்கினமாக யோசித்துப் பார்த்தால் கடைசியில் மனித இனம் ஒன்றுதான் அதிகமாக நன்றி மறக்கும் போல.. பந்தய வெறிபிடித்த இன்னாசி செய்யும் செயல்களை கதை என்பதை மறந்து மனதைப் பதற வைக்கிறது. புறாக்கள் வளர்க்கப்பட்ட கூடுகளைத் தேடி ,பல இடையூறுகளை தாண்டி, வருவது பெண்களின் மன நிலையையும் அகதிகளின் மனநிலையையும் நினைவூட்டுகிறது. என்னதான் வலுவான காரணம் இருந்தாலும் சட்டப்படி தவறான காரியம் செய்தால் நம் த...